மிட்டி இத்தர் – நாடகம்

(இருட்டினில் குரல்கள் கேட்கின்றன) இப்னு  : மிஹிர் உன்-நிசா! இங்கு அந்த முட்டாள் இல்லை. அவன் போய்விட்டான்! நூர் : ப்ச்ச்! அவர் மட்டுமே என்னை அப்படி அழைக்கலாம்! உங்களுக்கும் இவர்களுக்கும் நான் எப்போதும் நூர் ஜஹான்! (கதவு திறக்கும் ஒலி கேட்கிறது. ஓர் ஒல்லி இளைஞன் அறையின் விளக்குகளைச் சொடுக்கிவிட்டு வந்த வழியே ஓடி மறைகிறான். அழுக்கு மஞ்சள் நிறத்தில் முழுச் சுவரை மறைக்கும் ஒரு சுவரொட்டி வெளிச்சத்தில் மெல்ல தெரிகிறது. சாம்பல் நிற சிமெண்ட் […]

Read More மிட்டி இத்தர் – நாடகம்

புனைவு மொழியாக்கம் – ஒரு விவாதம்

  எழுத்தாளர் அ. முத்துலிங்கம் உடனான இணைய உரையாடல் ஒரு சிறப்பான அனுபவம். பைலட் உடன் காக்பிட்டில் சவாரி செய்வது, பிடித்த எழுத்தாளரை விடாது விரட்டி சந்திப்பது என ஆர்வத்தின் பேரில் அமைந்த அவரது சாகசங்களின் பட்டியல் வியப்புக்குரியவை . அவரை ஒரு முன்னோடி எழுத்தாளர், உலகத்தை ஆரத் தழுவி இலக்கியம் படைத்தவர் என்ற முறையில் பெரிதும் மதித்திருந்தேன். ஆனால் அவருடைய இந்த இயல்பு எனக்கு “அடுத்து என்ன” என்ற வாசகத்தை மஞ்சள் பெயிண்டில் வரைந்து எலுமிச்சையும் […]

Read More புனைவு மொழியாக்கம் – ஒரு விவாதம்

மலேசியா.. சில குறிப்புகள்

December 18 – December 25, 2019 ஆசானின் தயவால் முதல் சர்வதேச பயணம், மலேசியாவிற்கு. எழுத்தாளர் ம. நவீன் ஒருங்கிணைக்கும் வல்லினம் விருது விழா மற்றும் சுவாமி பிரம்மானந்தா வித்யாரண்யத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்ற ஜெ அழைக்கப்பட்டிருந்தார். ஜெவுடன் அருணாமாவும் சைதன்யாவும் பிரயாணத்திற்கு ஆயத்தமாக, GSSV நவீனும் நானும் உடன் தொற்றி கொண்டோம்.  கூலிம் தியான ஆசிரமத்தில் எழுத்தாளர் சை. பீர். முகம்மதிற்கு வல்லினம் விருது அளிக்கப்படவிருந்தது. விழாவில் ம. நவீனின் நாவல் ‘பேய்ச்சி’யை […]

Read More மலேசியா.. சில குறிப்புகள்

அபி தீட்டும் அச்சங்கள்

மனிதர்களில் ஒரு சிலர் மரபணு மாற்றத்தால் பிறர் கண்ணுக்குத் தெரியாத நிறங்கள் காணக்கூடிய திறன் பெற்றிருக்கிறார்கள். சாதாரண மனிதர்களை விட தொண்ணூறு லட்சம் வரையில் அதிக நிறங்கள் பார்க்க முடிந்த அவர்களை ‘Tetrachromats’ என்ற பெயரில் அழைக்கிறார்கள்.  தான் அவ்வாறு ஒரு Tetrachromat என்று அறியாத ஓவிய ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களை ஏரியோரம் அழைத்துச் செல்கிறார். மாணவர்களைப் பார்த்து “அந்த பாறையின் ஓரத்தில் உள்ள ஊதா கோடு தெரிகிறதா? அந்த இலையின் நுனியில் துவங்கும் அந்த சிவந்த […]

Read More அபி தீட்டும் அச்சங்கள்

“அழகிய மரம்”

1776ஆம் ஆண்டு. ரோமிலிருந்து பாலினோ தா பர்தால்மோ  (Paolino da San Bartolomeo)  என்னும் போதகர் மலபார்  வந்திறங்கினார்.  1789 வரையில் இந்தியாவில் தங்கிய அவர், இந்திய மொழிகள் குறிப்பாக சமஸ்கிருதம் மீது அலாதி ஆர்வம் கொண்டவராக இருந்தார். அலெக்சாண்டர் காலகட்டத்திலேயே மேன்மை எட்டியிருந்த இந்திய கைவினைத்தொழிலாளர்களின் நகல் தயாரிக்கும் புகழைக் கேள்வியுற்று, போர்ச்சுகலில் தயாரான வேலைப்பாடு மிகுந்த விளக்கினை இந்தியக் கைவினைக் கலைஞர் ஒருவரிடம் ஒப்படைத்தார். சில நாட்களில் எது அசல், எது நகல் எனக் […]

Read More “அழகிய மரம்”

இந்த பெருசுகளே இப்படித்தான்!

“இது என்ன?” “தொப்பி”  ஒவ்வொரு முறையும் இதே பதில். ஆறு வயது கதைசொல்லியிற்குப் பெரியவர்கள் அளிக்கும் இந்த விடை திருப்திகரமாக இல்லை.  அவன் நினைத்தபடி அவன் வரைந்த ஓவியம் அவர்களைப் பயமுறுத்தவும் இல்லை. கதை சொல்லி பெரியவனானான். அவனுடைய விமானம் ஆள் அருவமற்ற பாலைவனம் ஒன்றில் பழுதடைந்து விழுகிறது. எவரும் இல்லை என்று திகைத்து நிற்கும் விமானியின் முன் நம் நாயகன் குட்டி இளவரசன் எதிர்ப்படுகிறான்.  ஒரு செம்மறி ஆட்டை விமானி வரைந்து கொடுப்பானானால் அதை தன் […]

Read More இந்த பெருசுகளே இப்படித்தான்!

பாவிச்சின் ஜிகினா துகள்கள்

மிலராத் பாவிச்சின் புனைவுலகில் பச்சை குத்தப்பட்ட மனிதன் ஒருவன் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். பைசான்டைன் பேரரசன் அறியும் பொருட்டு அவன் உடம்பெங்கும் கசார்களின் வரலாறு பச்சை குத்தப்பட்டு கான்ஸ்டண்டினோப்பிளுக்கு அனுப்பப்படுகிறான். இரண்டாம் கசார்களின் ஆண்டு குறித்த பதிவினை வாங்க நினைக்கும் ஒருவனால் அவனது இடக்கையை இழக்கிறான். பல முறை கசார் தலைநகரத்திற்கு வரலாற்றைத் திருத்தும் பொருட்டு அனுப்பவும் படுகிறான். பல மணி நேரங்கள் தொடர்ந்து நின்று, தன் முதுகிலிருந்தும், தொடையிலிருந்தும் பிரதி எடுக்கும் கிரேக்க எழுத்தர்களிடம் கூலி […]

Read More பாவிச்சின் ஜிகினா துகள்கள்

சிவப்பு கனவுகள் கண்டவன் – ஜூலியஸ் பூசிக்

https://www.jeyamohan.in/125463#.XY8Ao0YzZnI ஏப்ரல் 24, 1942. ஒரு நொண்டிக் கிழவர் கட்சி அலுவல் நிமித்தமாகத் தட்டுத் தடுமாறி ஜிலினெக் தம்பதியின் வீட்டை வந்தடைகிறார். தேநீர் பரிமாறப்படும் வேளையில் கெஸ்டப்போ காவலாளிகள் அவர்களைக் கண நேரத்தில் சூழ்ந்து கொள்கிறார்கள். அந்நிமிடம் அப்படையினருக்கு எத்தகைய அதிர்ஷ்டம் அடித்திருக்கிறதென்பது தெரியாது… பிரஃபஸர் ஹோராக்கின் வசம் துப்பாக்கியுள்ளது. பிரயோகித்தால் அறையில் உள்ள தன் குழுவினர் மேல் கெஸ்டப்போவினர்  தாக்குதல் நடத்தக்கூடும் என்று எண்ணித் தயங்கி நிற்கிறார். காவலாளிகள் பலவந்தப்படுத்தி அவரை கொண்டு செல்லும்போதும்,  கிழவர் […]

Read More சிவப்பு கனவுகள் கண்டவன் – ஜூலியஸ் பூசிக்

ஒரு சுத்தமான, நன்கு ஒளியூட்டப்பட்ட இடம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே

பொழுது மிகவும் பிந்திவிட்டிருந்தது. அனைவரும் அந்த விடுதியை விட்டு வெளியேறியிருந்தனர் ஒரு வயோதிகரைத் தவிர. மின் விளக்கினால் விழுந்த இலைகளின் நிழல் தன் மேல் படும்படி அவர் அமர்ந்திருந்தார். பகல் முழுக்கத் தூசி படிந்திருக்கும் அத்தெருவில் தூசடங்கி பனிப்படர்ந்திருந்தது. அந்த அந்தி வேளையில் அங்கே அமர்ந்திருப்பது அந்த காது கேளாதவருக்குப் பிடித்திருந்தது. இரவில் நிலவும் நிசப்தத்திலிருந்த வித்தியாசத்தை அப்போழுது அவரால் உணர முடிந்தது. விடுதியிலுள்ள இரண்டு பணியாட்களுக்கும் தெரியும் அந்த முதியவர் குடித்திருக்கிறாரென்று. என்ன தான் நல்ல […]

Read More ஒரு சுத்தமான, நன்கு ஒளியூட்டப்பட்ட இடம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே

முகலாயன் – சிறுகதை

எண்ணங்களாலான ரயில் மிதவேகத்திலிருந்து அபாய நிலைக்குச் சென்று சுமார் எழுபது நிமிடங்களாகிவிட்டிருந்தன. பூண்டைத் துண்டாக்கி  வகிடெடுக்கும் இடத்தில் தேய்த்தால் முடி நன்கு வளரும் என்று காவி உடுத்திய வைத்தியர் நம்பிக்கையளிக்கிறார். நீண்ட பற்களுடன் எங்கிருந்தோ நுழைந்த  ட்ராக்குலா பூண்டைக் கண்டு மிரண்டு அங்கிருந்து நகர்கிறான். நான் ரத்த தானமளித்துக் கொண்டிருக்கும் இடம் நோக்கி நேரே ஓடி வரும் அவனை இடைமறித்து, என் கணக்கு வாத்தியார் O என அவன் முதுகில் ஒரு முத்திரை போடுகிறார்.  “O பாஸிட்டிவ் […]

Read More முகலாயன் – சிறுகதை